பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோ மிதென்றான்
மாயம் வல்ல மாமன் - அதனை வசம தாக்கி விட்டான்
பாயுமா வொரெட்டில் - செல்லும் பாரமான பொற்றேர்
தாய முருட்ட லானார் - அங்கே சகுனி வென்று விட்டான் (189)
இளையரான மாதர் - செம்பொன் எழிலிணைந்த வடிவம்
வலை அணிந்த தோளும் - மாலை மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள் - தம்மில் மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும் - சாயற் கனினும் நன்கு கொண்டோர். (190)
ஆயிரக் கணக்கா - ஐவர்க் கடிமை செய்து வாழ்வோர்
தாய முருட்டலானார்: அந்தச் சகுனி வென்று விட்டான்
ஆயிரங்க ளாவார் - செம்பொன் அணிகள் பூண்டிருப்போர்
தூயிழைப் பொனாடை -சுற்றுந் தொண்டர் தம்மை வைத்தான் (191)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications