பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மூடப்புலைமையினோன்அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன்,
துரியோ தனனும் சுறுக்கெனவே தான் திரும்பி
அரியோன் விதுர னவனுக் குரை செய்வான்-
செல்வாய் விதுரா! நீ சிந்தித்திருப்பதேன்?
வில்வா ணுதலினாள், மிக்க எழிலுடையாள்:
முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள்,
இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள் பால்
சென்று விளைவெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி
மன்றினிடை யுள்ளான்நின் மைத்துனன் நின்ஓர் தலைவன்
நின்னை அழைக்கிறான் நீள்மலையில் ஏவலுக்கே
என்ன உரைத்தவளை இங்கு கொணர்வாய் என்றான்.
(தொடரும்)












Click it and Unblock the Notifications