பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நிலாவும் வான்மீனும் காற்றும்
(தொடர்ச்சி)
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்வானவன் கொண்டு வந்தான்:
பண்ணி விசைத்தல் வொலிக ளனைததையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
தண்ணி வரும்மணி யோசையும், பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணு முன்னே அன்னக் காவடி பிச்சை யென்
றேங்கிடு வான்குரலும். (5)
வீதிக்கதவை அடைப்பதுங், கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்:
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணிக் கைப்படுமோ?
சீதக் கதிர்மகி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய், மனமே! (6)
(தொடரும்)












Click it and Unblock the Notifications