பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
சோரனங் கவற்றை - வார்த்தை சொல்லு முன்னர் வென்றான்
தீர மிக்க தருமன் -உள்ளத் திடனிழிந் திடாதே
நீரை யுண்ட மேகம் -போல நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் - போரில் மறலி யொத்து மோதும் (192)
என்று வைத்த பணயந் - தன்னை இழிஞன் வென்று விட்டான்.
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்திழந்தான்.
நன்றிழைத்த தேர்கள் -போரின் நடை யுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம் -தருமன் ஈடு வைத்திழந்தான் . (193)
எண்ணிலாத கண்டீர் - புவியில் இணை யிலாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் தம்மை நாலு கோடி வைத்தான்:
கண்ணி ழப்பவன் போல - அவையோர் கன மிழந்து விட்டான். (194)
மாடிழந்து விட்டான் -தருமன் மந்தை மந்தையாக
ஆடிழந்து விட்டான் - தருமன் ஆளிழந்து விட்டான் :
பீடிழந்த சகுனி பின்னுஞ் சொல்லு கின்றான்:
நா டிழக்கவில்லை - தருமா! நாட்டை வைத்தி டென்றான். (195)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications