For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ
மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத்திடுமோ? மேல்
வான் போறுத்திடுமோ? பழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம்?
தூ! வென் றெள்ளி விதுரனும் சொல்வான். (196)
பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத்தோடுஞ் சூழல்
முற்றும் வேரறச் செய்குவ ரன்றோ?
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப்பேன் , குறிக் கொண்மின்
மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா. (197)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]