For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நின்னுடைய நன்மைக்கிந் நீதியொலாஞ் சொல்கிறேன்என்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா!
பாண்டவர்தாம் நாளைப் பழியதனை தீர்த்திடுவார்.
மாண்டு தரைமேல், மகனே! கிடப்பாய் நீ
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல் செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மை எனக் கொண்டாயோ?
மஞ்சனே அச்சொல் மருமத்தே பாய்வதென்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]