For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
வெந்நரகு சேர்த்துவிடும். வித்தை தடுத்துவிடும்.மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்
சொல்லிவிட்டேன், பின்னொருகால் சொல்வேன் கவுரவர்காள்
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது!
போராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும்.
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்ட தெலாம்
மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்
ஆண்டவரே! யாங்கள் அறியாமை யால் செய்த
நீண்ட பழி இதனை நீர்பொறுப்பீர் என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப் போர் வரும்! நீர் அழிந்திடுவீர்
பூபால ரே என்றப் புண்ணியனுங் கூறினான்.
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]