For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
23.பகைவனுக்கு அருள்வாய்
3 உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடல்
உள்ளம் நிறைவாமோ - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே!
உள்ளம் நிறைவாமோ - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே!
4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?- நன்னெஞ்சே! (பகைவ)
5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன் - நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கடைகொண்டு
நினறதுங் கண்ணன்றோ? - நன்னெஞ்சே! (பகைவ)
6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் -நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினன்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே! (பகைவ)
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]