பாரதி பக்கம்
விமனெழுந் துரைசெய் வான் - இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை ;
தாமரைப் பூவினில் வந்தான் - மறை
சாற்றிய தேவன் திருக்கழ வாணை
மாமகளைக் கொண்ட தேவன் - எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத் தாணை
காமனைக் கண்ணழ லாலே - சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில் (99)
ஆணையிட் டிஃதுரை செய்வேன் - இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை
பேணும் பெருங்கன வொத்தான் - எங்கள்
பெண்டு திரவுபதியைத் தொடைமீதில்
நாணின்றி வந்திரு என்றான் - இந்த
நாய்மக னாந்துரி யோதனான் றன்னைச்
மாணற்ற மன்னர்கண் முன்னே - என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, (100)
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன் - தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் - அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! - இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையெற்ற தெய்வத்தின் வார்த்தை - இது
சாதனை செய்க, பராசக்தி என்றான். (101)












Click it and Unblock the Notifications