For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
23.பகைவனுக்கு அருள்வாய்
(தொடர்ச்சி)
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோயா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ? (1)
ஏழைமை யுண்டோயா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ? (1)
உள்ள தெலாமோக் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோடா? (2)
சித்தினியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால் - மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ? (3)
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]