பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
1.பராசக்தி வணக்கம்ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைத் தனன் சிற்பி, மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!
யாங்க ணே, எவரை, எங்ஙனஞ் சமைத் தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங் குனைச் சரணென் றெய்தினேன்: என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே. (1)
2. சரஸ்வதி வணக்கம்இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்:
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார்:
இடையின்றித் தொழில புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ? (2)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications