பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)வேறு
உள்ளந் துடித்துச் சுயோ தனன் - சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் - அட!
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய் - என்றன்
பெற்றி யறிந்திலை போலும் நீ! - அந்தக்
கள்ளக் கரிய விழியி னாள் - அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! - அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே - இங்குக்
கேட்க விரும்புமென் னுள்ளமே. (49)
வேண்டிய கேள்விகள் கேட்க லாம் - சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்- மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே - அவள்
நேரிடவே வந்த பின்புதான் - சிறு
கூண்டிற் பறவையு மல்லளே!- ஐவர்
கூட்டு மனைவிக்கு நாண மேன்?- சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் - அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டுவா. (50)
(தொடரும்)












Click it and Unblock the Notifications