For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
25. கற்பனையூர்
(தொடர்ச்சி)
கற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை (1)
கந்தர்வர் விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை (1)
திருமனை யிது கொள்ளைப் போர்க்கப்பல் - இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில் - நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே (2)
அந்நகர் தனிலோர் இளவரசன் -நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்
மனைவியும் எழுத்தங்கு வந்திடுவாள் (3)
( தொடரும்)
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]