பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)

நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை

நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்

தாயத்தி லேவிலைப் பட்ட பின் ;- - என்ன

சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? - அவர்

தாயத்தி லேவிலைப்பட்ட வர் - புவி

தாங்குத் துருபதன் கன்னி நான் - நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால்- பின்பு

தார முடைமை அவர்க்குண்டோ? (52)

கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறங்

கண்டவர் யாவரும் இல்லை யோ?- மன்னர்

செளரியம் வீழ்ந்திடும் முன்ன ரே - அங்கு

சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?- புகழ்

ஒவ்வுற வாய்ந்த குருக்களும் - கல்வி

ஓங்கிய மன்னருஞ் சூதி லே - செல்வம்

வவ்வுறத் தாங்கண் டிருந்த னர் - என்றன்

மான மழிவதும் காண்பரோ? (53)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+