பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்தி லேவிலைப் பட்ட பின் ;- - என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? - அவர்
தாயத்தி லேவிலைப்பட்ட வர் - புவி
தாங்குத் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால்- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ? (52)
கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறங்
கண்டவர் யாவரும் இல்லை யோ?- மன்னர்
செளரியம் வீழ்ந்திடும் முன்ன ரே - அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?- புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் - கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதி லே - செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்த னர் - என்றன்
மான மழிவதும் காண்பரோ? (53)
(தொடரும்)












Click it and Unblock the Notifications