பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

25. கற்பனையூர்

(தொடர்ச்சி)

செந்தோ லசுரனைக் கொன்றிடவே - அங்குட்
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோஷத்துட செங்கலையும் அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனை கட்டுவோம். (7)


கள்ளரல் வீடடினுட் புகுந்திடவே - வழி
காண்ப திலாவகை செய்திடுவோம் - ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! - நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? (8)


குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம் - அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே ;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் - நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே (9)


(ஜான் ஸ்கர் ஆங்கிலப் புலவன் நட்சத்திரத் தூதன் என்ற பத்திரிக்கையில் பிரசுரித்த The Town of Lets Pretend என்ற பாட்டின் மொழிபெயர்ப்பு.)

குறிப்பு: - இப்பாடலின் பொருள்: கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்குக்குறிப்பிடுகிறது. யோவான் என்பது குமார தேவனுடைய பெயர்.

அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலை பெற்று, மனிதன் மோட்சமடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தைஅடைய வேண்டும் என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது.கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதினாலன்றி மோட்சம் எய்தப்படாது.

( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+