பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கவிதைக் காதலி
வாரய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன.
நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாகக் கொள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து (5)
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன.
நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாகக் கொள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து (5)
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்:
கலந்துயரம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயிலகளின் இன்குரல் போன்ற
தீங்குல லுடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்:
மலரினத் துன்றன் வாள்விழி யொப்ப (10)
நிலவிய தொன்றினை நேர்திலேன்: குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள்போல் தண்ணிய
நீருடைத் தறிகிலேன்: நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன். (15)
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சதகந் தொடுமுன்
வீழ்த்திடைத் தொண்டையில் வேதனை செய்தென
நின்னொடு களிதது நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற் (20)
கொடியவயன யாவுளும் கொடியதாம் மிடிமை.
(தொடரும்)












Click it and Unblock the Notifications