பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
மாத விடாயி லிருக்கிறாள் - அந்த
மாதர சென்பதுங் கூறினான் -கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் - நின்ற
பாண்டவர் தம்முகம் நோக்கினார் - அவர்
பேதுற்று நிற்பது கண்ட னன் - மற்றும்
பேரவை தன்னில் ஒருவரும்- இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே - உள்ளத்
திண்மையி லாதங் கிருந்தனர். (56)


பாகனை மீட்டுஞ் சினத்துடன் - அவன்
பார்த்திடி போலுரை செய்கிறான் - பின்னும்
ஏகி நமதுளங் கூறடா - அவள்
ஏழு கணத்தில் வரச்செய் வாய் - உன்னைச்
சாக மிதித்திடுவேடா - என்று
தார்மன்னன் சொல்லிடப் பாகனும் - மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திட்டான்- அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே (57)


சீறும் அரசனுக் கோழையேன் - பிழை
செய்த துண்டோ?- அங்குத் தேவியார் - தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், - அவர்
நுங்களைக் கேட்கத் திரும்புவார் - அவர்
ஆறுதல் கொள்ள ஒரு மொழி - சொல்லில்,
அக்கண மேசென் றழைக்கி றேன் - மன்னன்
கூறும் பணிசெய வல்லன் யான் - அந்தக்
கோதை வராவிடில் என் செய்வேன்? (58)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+