பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

அடிமைச்சருக்கம்

(தொடர்ச்சி)

விதுரன் சொல்வது

வேறு

காயு ருட்ட லானார் - சூதுக் களி தொடங்க லானார்,

மாய முள்ள சகுனி - பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்;

நீ அழித்த தெல்லாம் - பின்னும் நின்னிடத்து மீளும்.

ஓய் வடைந்திடாதே - தருமா! ஊக்கமெய்து கென்றான். (14)

கோயிற் பூசை செய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல் போலும்,

ஆயிரங்க ளான - நீதி யவைஉணர்ந்த தருமன்

தேயம் வைத் திழந்தான்- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். (15)

நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்களென்று தருதார்

ஆட்டு மந்தை யாமென் றுலகை , அரச ரெண்ணி , விட்டார்,

காட்டு முண்மை நூல்கள் பல தாங் காட்டினார்க ளேனும்

நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை (16)

ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே.

சோரஞ் செய்திடா மே - பிறறைத் துயரில் வீழ்த் திடாமே,

ஊரை யாளு முறைமை- உலகில் ஓர் புறத்து மில்லை

சாரமற்ற வார்த்தை! - மேலே சரிதை சொல்லுகின்றோம் (17)

(அடுத்தது சகுனி சொல்வது)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+