பாரதி பக்கம்
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
காயு ருட்ட லானார் - சூதுக் களி தொடங்க லானார்,
மாய முள்ள சகுனி - பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்;
நீ அழித்த தெல்லாம் - பின்னும் நின்னிடத்து மீளும்.
ஓய் வடைந்திடாதே - தருமா! ஊக்கமெய்து கென்றான். (14)
கோயிற் பூசை செய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
ஆயிரங்க ளான - நீதி யவைஉணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். (15)
நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்களென்று தருதார்
ஆட்டு மந்தை யாமென் றுலகை , அரச ரெண்ணி , விட்டார்,
காட்டு முண்மை நூல்கள் பல தாங் காட்டினார்க ளேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை (16)
ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே.
சோரஞ் செய்திடா மே - பிறறைத் துயரில் வீழ்த் திடாமே,
ஊரை யாளு முறைமை- உலகில் ஓர் புறத்து மில்லை
சாரமற்ற வார்த்தை! - மேலே சரிதை சொல்லுகின்றோம் (17)
(அடுத்தது சகுனி சொல்வது)












Click it and Unblock the Notifications