For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
இவ்வுரை கேட்டதுச் சாதனன் -அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன் -இவன்
செவ்வி சிறிது புகலு வோம் - இவன்
தீமையில் அண்ணனை வென்றவன் ; கல்வி
எவ்வள வேனுமி லாதவன் - கள்ளும்
ஈரக் கறியும் விரும்பு வோன் - பிற
தெவ்வார் இவன் றனை அஞ்சுவார் - தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார் ; (60)
புத்தி விவேக மில்லாதவன் - புலி
போல உடல்வலி கொண்டவன் - கரை
தத்தி வழியுஞ் செருக்கி னால் - கள்ளின்
சார்பின் றியேவெறி சான்றவன் - அவ
சக்தி வழிபற்றி நின்ற வன் - சிவ
சக்தி நெறிஉணராதவன் -இன்பம்
நத்தி மறங்கள் இழைப்ப வன் - என்றும்
நல்லவர் கேண்மை விலக்கி னோன். (61)(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]