For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
செல்வம்முற் றிழந்து விட்டாய்! - தருமா
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந் தாய்.
பல்வளம் நிறை புவிக்கே - தருமன்
பார்த்திவன் என்பதினிப் பழங் கதைதான்!
சொல்வதோர் பொருள் கேளாய் - இன்னுஞ்
சூழந் தொரு பயணம் வைத் தாடுதி யேல்
வெல்வதற் கிட முண்டாம்- ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம்
எல்லாமிழந்த பின்னர் - நின்றன் (18)
இளையரும் நீரும் மற்எறதிற் பிழைப் பீர்?
பொல்லா விளையாட்டில் - பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளை ஞர் - சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணய மென்றே
சொல்லால் உளம்வருந் தேல் - வைத்துத்
தோற்றதை மீட்டென்று சகுனி சொன்னான். (19)
(தொடரும்)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]