For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
அண்ண னொருவனை யன்றியே - புலி
அத்தனைக் குந்தலை யாயினோம் - என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன் - அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்தி டான் - அருட்
கண்ணழி வெய்திய பாதகன் - அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா என்றவ்
வண்ண னுரைத்திடல் கேட்டனன் - நல்ல
தாமென் றுறுமி எழுந்த னன். (62)
பாண்டவர் தேவி யிருந்த தோர் - மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்த னன் ; - அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் - நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன் ;- - அவன்
தீண்டலை யெண்ணி ஒதுங்கி னான் - அடி
செல்வ தெங்கே? யென்றிரைத்திட்டான் - இவன்
ஆண்டகை யற்ற புலைய னென்று - அவன்
அச்ச மிலா கெதிர் நோக்கியே. (63)(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]