பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
கருணனும் சிரித்தான் - சபையோர்
கண்ணின் நீருதிர்த் தார்.
இருள் நிறைந்த நெஞ்சன் - களவே
இன்ப மென்று கொண்டான்
அரவு யர்த்த வேந்தன் - உவகை
ஆர்த் தெழுந்து சொல்வான்
பரவு நாட்டை யெல்லாம் -எதிரே
பணய மாக வைப்போம். (20)
தம்பிமாரை வைத்தே -ஆடித்
தருமன் வென்று - விட்டால்
முன்பு மாமன் வென்ற - பொருளை
முழுதும் மீண் டளிப் போம் .
தம்பி வேலை செய்வோம் - தருமா!
நாடிழந்த பின்னர்
அம்பி னொத்த விழியாள் - உங்கள்
ஐவருக்கு முரியாள் (21)
(தொடரும்)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications