For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
தேவர் புவிமிசைப் பாண்டவர் ; அவர்
தேவி, துருபதன் கன்னி நான் - இதை
யாவரும் இற்றை வரையி னும் - தம்பி
என்முன் மறந்தவரில்லை காண் - தம்பி
காவ லிழந்த மதிகொண் டாய் - இங்குக்
கட்டுத் தவறி மொழி கிறாய் - தம்பி
நீவந்த செய்தி விரைவினிலே -சொல்லி
நீங்குக என்றனள் பெண்கொடி . (64)
பாண்டவர் தேவியு மல்லை நீ - புகழ்ப்
பாஞ்சாலத் தான்மக ளல்ல நீ - புவி
யாண்டருள் வேந்தர் தலைவ னாம் - எங்கள்
அண்ணனுக்கு கேயடி மைச்சி நீ - மன்னர்
நீண்ட சபைதனிற் சூதி லே - எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்கு - உன்னைத்
தூண்டும் பணய மெனவைத் தான் - இன்று
தோற்று விட்டான் - தருமேந்திரன். (65)(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]