For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

10. அறிவே தெய்வம்

    கண்ணிகள்

    ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
    அலையும் அறிவிலிகாள்! - பல
    லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
    டாமெனல் கேளீரோ! (1)


    மாடனைக் காடனை வேடனைப் போற்றி
    மயங்கும் மதியிலிகாள்! - எத
    னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
    றோதி யறியீரோ! (2)


    சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
    சுருதிகள் கேளீரோ!- பல
    பித்த மதங்களி லேதடு மாறிப்
    பெருமை யழிவீரோ? (3)


    வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
    வேதம் புகன்றிடும் - ஆங்கோர்
    வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
    வேத மறியாதே. (4)


    நாமம்பல கோடியொர் உண்ண்ை குளவென்று
    நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
    நாமத்தை நீருண்மை யென்று கொள் ளீரென்றந்
    நான்மறை கண்டினதே. (5)


    போந்த நிலைகள் பலவும் பராசக்தி
    பூணு நிலையாமே - உப
    சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
    சான்றவர் கண்டனரோ. (6)


    கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
    காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
    அவலை நினைத்துமி மெல்லுதல் போலிங்கு
    அவங்கள் புரிவீரோ? (7)


    உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
    ஒளிர்ந்திடும் ஆன்மாவே -இங்கு,
    கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
    கூவுதல் கேளீரோ? (8)


    மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
    வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
    கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
    காட்டவும் வல்லீரோ? (9)


    ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
    உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
    ஒன்று பிரம முள துண்மை யஃதுன்
    உணர்வெனக் கொள்வாயே. (10)

    (தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X