பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
விம்மியழுதாள் -விதியோ கணவரே!
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ் செய்து
பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?
என்றாள். விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே
குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்.
தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்.
பொருமி யவள்பின்னும் புலம்புவாள் - வான் சபையில்
வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்,
மேலொ ரிருக்கின்றீர், வெஞ்சினமேன் கொள்கிலரோ?
வேலோ ரெனை யுடைய வேந்தர் பிணிப்புண்டார்,
இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை
மங்கியதோர் புன்மதியாய் ! மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கின்றாய்
நின்னை யெவரும் நிறுத் தடா என்பதிலர்.
என் செய்கேன்?என்றே இரைந்தழுதாள் பாண்டவரை
மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.
மற்றவர் தாம் முன்போல் வாயிழந்து சீர்குன்றிப்
பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து, வெறிகொண்டு
தாதியடி தாதி யெனத் துச்சாதனன் அவளைத்
தீதுரைகள் கூறினான், கர்ணன் சிரித்திட்டான்.
சகுனி புகழ்ந்தான், சபையினோர் ? வீற்றிருந்தார்!
தகுதியுயர் வீட்டுமனுச் சொல்கின்றான், தையலே(தொடரும்)












Click it and Unblock the Notifications