பாரதி பக்கம்
11. பரசிவ வெள்ளம்
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. (13)
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவார்காண் ;
என்றுமே யிப்பொருளோ யீசரெனப் போற்றுவரே. (14)
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! (15)
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டுமுபாயம் மிகவுமெளி தாகுமடா ! (16)
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! (17)
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா ! (18)
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியசெந்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! (19)
காவித் துணிவேண்டா, கற்றைச்சடை வேண்டா,
பாவித்தில் போதும் பரமநிலை யெய்துவதற்கே (20)
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை ;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா ! (21)
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா! (22)
சந்தமு மெங்குமெல்லாந் தானாகி நின்ற சிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! (23)
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ்சித்தை யொன்றே போதுமடா! (24)












Click it and Unblock the Notifications