For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
சாலநன்கு கூறனீர்! ஐயா! தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதை தன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
தக்கது நீர் செய்தீர் ; தருமத்துக் கிச் செய்கை
ஒக்கும் என்று கூறி உகந்தனராம் சாத்தரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடை.யீர்! பெண் களுடன் பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்! என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடித்தாள் .
வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே சில மொழிகள்
பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான் (67)(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]