பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

12. உலகத்தை நோக்கி வினவுதல்

    நிற்பதுவே,. நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்

    சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ?

    கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே நீங்க ளெல்லாம்

    அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? (1)


    வானகமே, இனவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்

    கானலின் நீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?

    போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்

    நாணுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ? (2)


    கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

    கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ ?

    சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,

    சோலை பொய்யாமோ ?- இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? (3)


    காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

    வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?

    காண்பதுவே உறுகிகண்டோம் காண்பதெல்லாம் உறுதியில்லை

    காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் . (4)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+