For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
காளிபாட்டு
யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! - தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிகளனைத்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய்- காளி! - பொறியை விஞ்சி நின்றாய் (1)
தீது நன்மை யெல்லாம் - காளி! - தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிகளனைத்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய்- காளி! - பொறியை விஞ்சி நின்றாய் (1)
இன்பமாகி விட்டா. - காளி - என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால் - காளி! - பிறிது நானும் உண்டோ?
அன்பளித்து விட்டாய் காளி! - ஆண்மை தந்து விட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய்- காளி! தொல்லை போக்கி விட்டாய். (2)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]