For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
14.சித்தாந்தச் சாமி
- சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்; - பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
முண்ட திருச் சுடராம் ;- - பெண்ணே! (1)
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டலருஞ் சுடராம் ; - பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம் ; - பெண்ணே! (2)
கோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம் ; - பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் என்பதை
முன்னரிடுஞ் சுடராம் ; - பெண்ணே! (3)
பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம் - பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
காண வொளிர்ச் சுடராம் ; - பெண்ணே! (4)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]