பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

மஹாசக்தி வெண்பா

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங் காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம். (1)


நெஞ்சிற் கவலை நிதமும் பயிராகி,
அஞ்சி உ.யிர் வாழ்தல் அறியாமை: - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு. (2)


வையகத்துக் கில்லை, மனமே! நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செய்யுவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். (3)


எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தவனாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு. (4)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+