For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மஹாசக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங் காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம். (1)
மன்ன நிதங் காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம். (1)
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராகி,
அஞ்சி உ.யிர் வாழ்தல் அறியாமை: - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு. (2)
வையகத்துக் கில்லை, மனமே! நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செய்யுவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். (3)
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தவனாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு. (4)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]