பாரதி பக்கம்
15, பக்தி
பல்லவி
மதியினாலே - தெய்வ - பக்தியினாலே
சரணங்கள்
- 1, பக்தியினாலே - இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தநந் தெளியும் - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)
2. காமப் பிசாசைக் - குதி
கால்கொண்டடித்து விழுந்திடலாகும்
தாமசப் பேயைக் - கண்டுத்
தாக்கி மடிந்திட லாகும் ; எந்நேரமும்
தீமையை எண்ணி - அஞ்சுத்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம் - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட
பாச மறுப்போம்- இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் - உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி - இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் (பக்தி)
4. சோர்வுகள் போகும், - பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம் பெறலாகும், நற்
பார்வைகள் தோன்றும் - மிடிப்
பாம்பு கடித்த விஷமதன் றேநல்ல
சேர்வைகள் சேரும் - பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்.
தீர்வைகள் தீரும் - பிணி
தீரூம், பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)












Click it and Unblock the Notifications