கட்சி ஆரம்பித்த எழுத்தாளர் கமலா தாஸ்

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறி பரபரப்பூட்டிய பிரபல எழுத்தாளர் கமலா தாஸ் என்ற சுரையா, புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளார். தனதுகட்சிக்கு லோக் சேவா கட்சி என்று பெயர் வைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாதவிக் குட்டி என்ற கமலா தாஸ், பிரபல எழுத்தாளர். சமீபத்தில் அவர் முஸ்லீமாக மாறினார். சுரையா என்ற பெயரையும்சூட்டிக் கொண்டார். இப்போது கட்சி துவக்கியுள்ளார்.

தனது கட்சி அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார் சுரையா. நாங்கள்தான் அடுத்து ஆட்சியமைப்போம் என்றும்கூறுகிறார் அவர்.

கேரள அரசியல் தலைவர்களின் அலங்கோல அரசியலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பட்டினிச் சாவுகள், நோய்களால் சாவோரைக் காக்க எந்தத்தலைவரும் கேரளத்தில் இல்லை. இதற்காகவே நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். அன்பு, தியாகம், சேவை ஆகியவையே எனது கட்சியின் தாரகமந்திரங்களாகும்.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எனது கட்சியின் கிளைகளை அமைக்கவுள்ளேன்.

அடுத்த தேர்தலில் நானும் போட்டியிடுவேன். எனது வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். ஒருவேளை நாங்கள் தோற்று விட்டால், அது உண்மையின்தோல்வியாகும் என்றார் அவர்.

1984- ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட கமலா தாஸ், 1700 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+