பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கவிதைத் தலைவி
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும் இவ்வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழக்கைப் பாலையில் வளர்பல முட்கள் போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங் கதைத்திறளை, வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே! மனைக்கன்
வாழ்வினை வகுப்பாய், வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர் நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப்பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே! நன்மனைத்
தலவீை! ஆங்கத் தனிப்பதர்ச் செயதிகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவமாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து,
வானசாத்திரம், மகமது வீழ்ச்சி.
சின்னப் பையல் சேவகத் திறமை,
எனவரு நிகழ்ச்சி .யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலெளகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசக்தியின் பெண்ணே! வாழ்க!
காளியின் குமாரி! அறங்காத் திடுக!
வாழ்க! மனையகத் தலைவி வாழ்க!
(தொடரும்)












Click it and Unblock the Notifications