பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்!
ஐய, செல்வம் பெருமை இவற்றின்
காத லாலர சாற்றுவ னல்லேன்
காழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே
ஒத லானும் உணர்த்துத லானும்
உண்மை சான்ற கலைத் தொகை யாவும்
சாத லின்றி வளர்ந்திடு மாறும்,
சகுனி, யாரைச் சாளுதல், கண்டாய்! (173)
என்னை வஞ்சித்தென் செல் வத்தைக் கொள்வோர்
என்ற னக் கிடர் செய்பவ ரல்லர்,
முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்
பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கலியை அழைப்பார்
நின்னை மிக்க நெஞ்சிற் கொள்கையை நீக்குதி என்றான். (174)
(தொடரும்)












Click it and Unblock the Notifications