For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்.
ஐவரைக் கலந்த தேவி,
யாரடா பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களை வாய் என்றான். (86)
இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னந்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தனர்,துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞான சுந்தரி பாஞ்சாலி
எவ்வழி உய்வோ மென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். (87)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]