For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
சாத்திரம் பேசுகின்றாய் - எனத்
தழல்படு விழியொடு சகுனி சொல் வான்
கோத்திரத் குலமன் னர் - பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவரோ?
நாத்திறன் மிக உடை யாய்! - எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திர மறந்துவிட் டாய் - மன்னர்
வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ? (175)
தேர்ந்தவன் வென்றிடு வான் - தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்
நேர்ந்திடும் வாட்போரில் - குத்து
நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்
ஓர்ந்திடு சாத்திரப் போர் - தனில்
உணர்ந்தவன் வென்றிட உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான் - இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? (176)
வல்லவன் வென்றிடு வான் - தொழில்
வன்மைஇல் லாதவன் தோற்றிடுவான்
நல்லவ னல்லா தான் - என
நாண மிலார்சொலுங் கதை வேண்டா
வல்லமர் செய்திடவே - இந்த
மன்னர் முன்னேநினை அழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண் டேல் - மனத்
துணிவிலை யேலதுஞ் சொல்லு கென்றான். (177)
(தொடரும்)
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]