பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆயிரங் கால முயற்சியால் - பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர் - இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே - தமைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல் - இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத் - தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண் ! - ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல் - கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?
10. துரியோதனன் சினங் கொள்ளுதல்வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்
மேன்மை கொண்ட விழியாகத் துள்ளோன்
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பின்னும் மற்றொரு கண்ணெனக் கொண்டோன்
முற்று ணர்திரித் ராட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன்சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏன்ற வாறு நயங்கள் புகட்ட (84)
கொல்லும் நோய்க்கு மருந்து செய் போழ்தில்
கூடும் வெம்மையே தாய்ப்பிணக் குற்றே
தொல்லு ணர்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வு றுதல் போல், ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லேதெரு ளாதான்,
தோமி ழைப்பதிலோர்மதி யுள்ளான்.
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான். (85)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications