பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
மற்றுள பெரியோர்கள் - தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றமிக் குயர்கன்னன் - பணிக்
கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள் சருவப் - பெரும்
புகழினர், தழுவினர், மகிழ்சிகொண்டார்,
நற்றவக் காந்தாரி -முதல்
நாரியர் தலைமுறைப் பாடிதொழுதார். (159)
குந்தியும் இளங்கொடி யும் - வந்து
கூடிய மாதர் நம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி - அன்பு
முணடுரை ? யாடிப்பின் பிரிந்து விட்டார்
அந்தியும் புருந்ததுவால் - பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய் - தங்கு
சாருமின் ணுணவமு துணடதன் பின் (160)
சந்தன மலர்புனைத் தே - இளந்
தையலர் வீணைகொண் டுயிருக்கி
விந்தைகொள்பாட்டிசைப்ப-அதை
விழைவொடு கேட்டனர் துயில் புரி ந்தார்
வந்ததொர் துன்பத்தினை - அங்கு
மடித்திட லன்றிப் பின்தருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ? - உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? (161)
(அடுத்தது பாண்டவர் சபைக்கு வருதல்)












Click it and Unblock the Notifications