For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

கலகலவெனச் சிரித்தான் - பழிக்
கவற்றையோர் சாத்திர மெனப்பயின் றோன்
பலபல மொழிகுவ தேன். - உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன.
நிலமுழு நாட் கொண்டாய் - தனி
நீ எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற் - செலுஞ்
செலவினுக் கழிகலை என நினைந் தேன். (168)


பாரத மண்டலத் தார் -தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ? - தொழில்
சூதெனி லாடுநர் அரசர ன்றோ?
மாரத வீரர்முன்னே - நடு
மண்டபத் தே பட்டப் பகலினிலே,
சூரசி காமணியே - நின்றன்
சொத்தினைச் திருடுவ மெனுங்கருத் தோ? (169)


அச்சமிங் கிதிலுண்டோ - விரைந்
தாடுவம் நெடும் பொழுதாயின தால்,
கச்சையொர் நாழிகை யா நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல்வாய் - வெற்றி
நினக் கியல்பாயின தறியா யோ?
நிச்சயம நீவெல்வாய் - பல
நினைகுவதேன்? களி தொடங்கு கென்றான். (170)

(அடுத்து சகுனியின் ஏச்சு )

Back To Index Page

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X