கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

Subscribe to Oneindia Tamil

""டோய் டோய் இன்னிக்கு நாம சண்டை விளையாட்டு ஆடலாமா?"" ன்னு கேட்டுது.

""என்னது சண்டை விளையாட்டா வேண்டாம் பா... நா வல்லெ""

""அட பயந்தாரீ ! பயந்துட்டியா; சும்மா ஒரு இதுக்குத்தாண்டோய். வெறும் விளையாட்டுத்தானெ"".

""வேணாம் வேணாம்; நா அந்த ஆட்டைக்கெல்லாம் வரமாட்டேம்பா... என்ன விட்டுரு"".

""அப்ப இனி ஒங்கூட நாம் பேசவே மாட்டேம்""ன்னு முகத்த நரி உம்முனு வச்சிக்கிட்டது.

அந்த மூஞ்சியப் பாத்ததும் முசக்குட்டிக்கு சிரிப்பு வந்துட்டது; ஆனா சிரிக்கல.

""கொஞ்சூண்டு சிரிப்பியாம் அதெ நாம் பாப்பனாம்"".

நரி சிரிக்கிறாப்பல தெரியல. கூடக் கொஞ்சம் உம்முனு வச்சிக்கிட்டு கண்ணயும் மூடிக்கிட்டு மூஞ்சிய தூக்கிவச்சிக்கிட்டது.

சேக்காளி இப்பிடி இருக்கது முசக்குட்டிக்கு சங்கடமா இருந்துது.

""சரி சரி; ஒனக்கு இப்ப சண்டை விளையாட்டு ஆடணும் ஆடுவம்""

மூஞ்சியில ஒரு களை வந்துட்டது நரிக்கு.

முசக்குட்டி கேட்டது:

""நம்மால விளையாட்டுக்குக் கூட சண்டை போட முடியாதெ. என்ன காரணத்த வச்சி சண்டையத் தொடங்குறது?""

""அது ஒண்ணுங் கஷ்டமில்ல; சின்ன விசயத்துக்குக் கூட சண்டை போடலாம் ரொம்ப லேசு""

""அப்பிடியா!"" முசக்குட்டிக்கு ஆச்சரியம்.

நரி போய் சின்னக் கல் எடுத்துட்டு வந்தது. அதை ரெண்டு பேருக்கும் இடையில வச்சி,

""இப்ப நாஞ் சொல்லுவெம் இது என்னோட கல்லுன்னுட்டு.

நீ சொல்லனும். கெடையாது இது என்னோட கல்லுன்னுட்டு.

கிடையவே கிடையாது இது என்னோட கல்லுதாம்.

இப்பிடி மாறி மாறி நாம சொல்லிக்கிடணும். பலமாச் சொல்லணும். கோவமாச் சொல்லணும். பதிலுக்கு ஆங்காரமாசொல்லணும். அப்ப நமக்குள்ள சண்டை வநதுரும்!""

சீ; என்னா விளையாட்டு இது. சாவஞ்செத்த விளையாட்டு. யோசிச்சிக்கிடடே இருந்தது முசக்குட்டி.

விளையாட்டெத் தொடங்க முசக்குட்டி பண்ற தாமதம் நரிக்கு மனசுக்குள்ள எரிச்சலும் கடுப்புமா வருது. ஆனாலும்,அவசரப்பட்டு காரியத்த கெடுத்துறப் படாதேன்னு நல்லதனமா இருந்தது.

ஆரம்பிக்கலாமான்னு பிரியமா கேட்டது நரி. இஷ்டமில்லாம சரீன்னு தலையாட்டுது முசக்குட்டி.

விளையாட்ட ஆரம்பிச்சது நரி.

""நல்லாப்பாத்துக்க; இது என்னோட கல்லு""

""எப்பிடிச் சொல்றெ ஒன்னோடதுன்னு""

""எப்பிடியும் சொல்லுவேம் இது என்னோட கல்லுதாம்""

""அதெப்பிடி; ஒன்னோட கல்லுன்னா அதுக்கான காரணத்த சொல்லனுமெ""

""அறிவு இருக்கா ஒனக்கு; அதெ நாந்தானெ தூக்கீட்டு வந்தேம்; பாத்துட்டுத்தானெ இருந்தெ?

ஆமாம் நீதாம் தூக்கிட்டு வந்தெ; பாத்தனென்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, நரி காதுல ரகசியம் சொல்ராப்ல""அவசரமா எனக்கு "இது வருது நொடியில பொயிட்டு வந்துருதேம்""ன்னு ஓடுனது.

சிரிப்பு வந்துட்டது நரிக்கு சீக்கிரம் வந்துருன்னு சொல்லி, ""கொஞ்சமா தின்னு தொலைக்கனும்"" ன்னு சொல்லிகிட்டேகாத்திருந்தது.

முசக்குட்டி போயிக்கிட்டே இருந்தது; நரி காத்துக்கிட்டே இருந்தது.

திரும்பி வரவே இல்ல அந்த முசக்குட்டி .

காட்டை விட்டே போயிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+