ஆர்ட் கால-ரி
இப்போது கம்ப்யூட்டர் மூலம் ஈ மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
கத்தி, ஈட்டி பாதுகாப்புடன் "மெயில் அனுப்பிய காலத்தை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா.
ஆதிகாலத்திலிருந்து இன்றைய எலக்ட்ரானிக் யுகம் வரை தபால் தொடர்பு எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைவிளக்க ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை கோயம்புததூரில் தபால் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அரசு சார்பில்அமைக்கப்பட்டிருந்த "காலரி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
இதில் இடம் பெற்ற ஒரு "ஈட்டி தபால்காரர் படம், அந்தக் கால தபால்காரரைப்பற்றிக் கூறியது. கையில் ஈட்டியுடன்,பெட்டியில் தபாலுடன் முண்டாசு கட்டிக் கொண்டு பல மைல்கள் நடந்தும், குதிரையின் மீதும் பல நாட்கள் பயணம்செய்து தபாலை உரியவரிடம் சேர்ப்பித்து வந்தனர் இந்த தபால்காரர்கள்.
பல மலைகளைக் கடக்கவும், ஆறுகளை நீந்திக் கடக்கவும், இரவு பகல் நடக்கவும், ஒரு விளக்குடன் செல்லும் இந்ததபால்காருக்குத் துணை "ஈட்டி தான். இந்த ஈட்டியைப் பயன்படுத்தி மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாகவும்,எதிரிகளிடமிருந்து தப்பியும், திறமையாக உரியவரிடம் தபாலைச் சேர்க்க அவர் கடும் சிரமத்திற்குள்ளாகவேண்டியிருந்தது.
ஆனால், இப்போது, எந்த நாடாக இருந்தாலும், ஊராக இருந்தாலும் நொடிப் பொழுதில் ஈ மெயில் சென்றடைந்துவிடுகிறது. அதுவும் பாதுகாப்பாக உரியவர் மட்டுமே பார்க்கும் வண்ணம் சென்று விடுகிறது.
"என்ன தான் இருந்தாலும், தபால் எழுதுவது ஒரு கலை. இந்தக் கலை அம்சம் குறைந்து வருகிறது. உள்ளத்தைத்தொடும் வகையில் (பெர்சனல் டச்!) தபால் எழுதுவதிலும், அதைப் பெறுவதிலும், ஆர்வமாகப் படிப்பதிலும் ஒருசுவை இருந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால், இப்போது ஆவலாகக் காத்திருக்கக் கூட தேவையில்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி விடலாம். இதில், எந்த உணர்வுமே இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் தமிழக மேற்கு மண்டலத் தபால்அதிகாரி விமலா குமார்.
இந்தியாவிலேயே அதிக நெட்வொர்க் கொண்ட ஒரு அமைப்பு தபால் துறை தான்.
இந்த தபால் அலுவலகங்களில் இப்போது ஈ மெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
எனவே கூடிய விரைவில், தபால் அலுவலகங்கள் எல்லாம் "ஈ மெயில் நிலையங்களாக மாற்ற அரசு முயற்சிமேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியக் குக்கிராமங்களில் கூட தகவல் தொழில்நுட்பப் புரட்சி துவங்கஇருக்கிறது.
ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரை:
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications