ஆர்ட் கால-ரி
இப்போது கம்ப்யூட்டர் மூலம் ஈ மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
கத்தி, ஈட்டி பாதுகாப்புடன் "மெயில் அனுப்பிய காலத்தை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா.
ஆதிகாலத்திலிருந்து இன்றைய எலக்ட்ரானிக் யுகம் வரை தபால் தொடர்பு எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைவிளக்க ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை கோயம்புததூரில் தபால் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அரசு சார்பில்அமைக்கப்பட்டிருந்த "காலரி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
இதில் இடம் பெற்ற ஒரு "ஈட்டி தபால்காரர் படம், அந்தக் கால தபால்காரரைப்பற்றிக் கூறியது. கையில் ஈட்டியுடன்,பெட்டியில் தபாலுடன் முண்டாசு கட்டிக் கொண்டு பல மைல்கள் நடந்தும், குதிரையின் மீதும் பல நாட்கள் பயணம்செய்து தபாலை உரியவரிடம் சேர்ப்பித்து வந்தனர் இந்த தபால்காரர்கள்.
பல மலைகளைக் கடக்கவும், ஆறுகளை நீந்திக் கடக்கவும், இரவு பகல் நடக்கவும், ஒரு விளக்குடன் செல்லும் இந்ததபால்காருக்குத் துணை "ஈட்டி தான். இந்த ஈட்டியைப் பயன்படுத்தி மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாகவும்,எதிரிகளிடமிருந்து தப்பியும், திறமையாக உரியவரிடம் தபாலைச் சேர்க்க அவர் கடும் சிரமத்திற்குள்ளாகவேண்டியிருந்தது.
ஆனால், இப்போது, எந்த நாடாக இருந்தாலும், ஊராக இருந்தாலும் நொடிப் பொழுதில் ஈ மெயில் சென்றடைந்துவிடுகிறது. அதுவும் பாதுகாப்பாக உரியவர் மட்டுமே பார்க்கும் வண்ணம் சென்று விடுகிறது.
"என்ன தான் இருந்தாலும், தபால் எழுதுவது ஒரு கலை. இந்தக் கலை அம்சம் குறைந்து வருகிறது. உள்ளத்தைத்தொடும் வகையில் (பெர்சனல் டச்!) தபால் எழுதுவதிலும், அதைப் பெறுவதிலும், ஆர்வமாகப் படிப்பதிலும் ஒருசுவை இருந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால், இப்போது ஆவலாகக் காத்திருக்கக் கூட தேவையில்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி விடலாம். இதில், எந்த உணர்வுமே இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் தமிழக மேற்கு மண்டலத் தபால்அதிகாரி விமலா குமார்.
இந்தியாவிலேயே அதிக நெட்வொர்க் கொண்ட ஒரு அமைப்பு தபால் துறை தான்.
இந்த தபால் அலுவலகங்களில் இப்போது ஈ மெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
எனவே கூடிய விரைவில், தபால் அலுவலகங்கள் எல்லாம் "ஈ மெயில் நிலையங்களாக மாற்ற அரசு முயற்சிமேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியக் குக்கிராமங்களில் கூட தகவல் தொழில்நுட்பப் புரட்சி துவங்கஇருக்கிறது.
ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரை:
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications