ஆர்ட் கால-ரி
இப்போது கம்ப்யூட்டர் மூலம் ஈ மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
கத்தி, ஈட்டி பாதுகாப்புடன் "மெயில் அனுப்பிய காலத்தை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா.
ஆதிகாலத்திலிருந்து இன்றைய எலக்ட்ரானிக் யுகம் வரை தபால் தொடர்பு எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைவிளக்க ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை கோயம்புததூரில் தபால் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அரசு சார்பில்அமைக்கப்பட்டிருந்த "காலரி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
இதில் இடம் பெற்ற ஒரு "ஈட்டி தபால்காரர் படம், அந்தக் கால தபால்காரரைப்பற்றிக் கூறியது. கையில் ஈட்டியுடன்,பெட்டியில் தபாலுடன் முண்டாசு கட்டிக் கொண்டு பல மைல்கள் நடந்தும், குதிரையின் மீதும் பல நாட்கள் பயணம்செய்து தபாலை உரியவரிடம் சேர்ப்பித்து வந்தனர் இந்த தபால்காரர்கள்.
பல மலைகளைக் கடக்கவும், ஆறுகளை நீந்திக் கடக்கவும், இரவு பகல் நடக்கவும், ஒரு விளக்குடன் செல்லும் இந்ததபால்காருக்குத் துணை "ஈட்டி தான். இந்த ஈட்டியைப் பயன்படுத்தி மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாகவும்,எதிரிகளிடமிருந்து தப்பியும், திறமையாக உரியவரிடம் தபாலைச் சேர்க்க அவர் கடும் சிரமத்திற்குள்ளாகவேண்டியிருந்தது.
ஆனால், இப்போது, எந்த நாடாக இருந்தாலும், ஊராக இருந்தாலும் நொடிப் பொழுதில் ஈ மெயில் சென்றடைந்துவிடுகிறது. அதுவும் பாதுகாப்பாக உரியவர் மட்டுமே பார்க்கும் வண்ணம் சென்று விடுகிறது.
"என்ன தான் இருந்தாலும், தபால் எழுதுவது ஒரு கலை. இந்தக் கலை அம்சம் குறைந்து வருகிறது. உள்ளத்தைத்தொடும் வகையில் (பெர்சனல் டச்!) தபால் எழுதுவதிலும், அதைப் பெறுவதிலும், ஆர்வமாகப் படிப்பதிலும் ஒருசுவை இருந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால், இப்போது ஆவலாகக் காத்திருக்கக் கூட தேவையில்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி விடலாம். இதில், எந்த உணர்வுமே இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் தமிழக மேற்கு மண்டலத் தபால்அதிகாரி விமலா குமார்.
இந்தியாவிலேயே அதிக நெட்வொர்க் கொண்ட ஒரு அமைப்பு தபால் துறை தான்.
இந்த தபால் அலுவலகங்களில் இப்போது ஈ மெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
எனவே கூடிய விரைவில், தபால் அலுவலகங்கள் எல்லாம் "ஈ மெயில் நிலையங்களாக மாற்ற அரசு முயற்சிமேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியக் குக்கிராமங்களில் கூட தகவல் தொழில்நுட்பப் புரட்சி துவங்கஇருக்கிறது.
ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரை:
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications