இந்தியா வந்த முதல் ரஷிய பயணிக்கு நினைவிடம்
அலிபாக்:
இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் ரஷிய சுற்றுலாப் பயணியான அதின்சியாஸ் நிகிதினுக்கு நினைவுச் சின்னம் அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.
1470-ம் ஆண்டு அலிபாக் நகருக்கு அருகே ரெவேண்டாவிலுள்ள செளல் துறைமுகத்திற்கு வருகை தந்தார் நிகிதின். தற்போது அவருக்கு அந்த இடத்தில்நினைவுச் சின்னம் அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் கொடுத்துள்ளது கொங்கன் கல்விக் கழகம்.
இதுதொடர்பான ஒப்பந்தம் கொங்கன் கல்விக் கழக தலைவர் தத்தா பாட்டீல் மற்றும் இந்தியாவிலுள்ள ரஷியா கலாசார கவுன்சில் துணைத் தலைவர்செல்சியேவ் இடையே கையெழுத்தாகியது.
இந்தியா வந்த நிகிதின் கால்நடையாகவே பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தார். பின்னர் இந்தியாவின் வரலாறு குறித்து அவர் புத்தகம் எழுதினார்.
ரூ. 7 லட்சம் செலவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இப்பணி முடிவடையும். இந்த நினைவுச் சின்னத்தைஅமைக்கும் பொறுப்பை சுஜாதா மாத்ரே ஏற்றுள்ளார்.
துவக்க விழாவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு ரஷிய கலாசாரக் கவுன்சிலை தத்தா பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications