For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
சூரிய தரிசனம்
சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேந்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்னே:
பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!
பாணுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்:
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (1)
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேந்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்னே:
பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!
பாணுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்:
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (1)
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்:
நாத வார்ரகடலின்னொலி யோடு
நற்ற மழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்:
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (2)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]