For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

நவம்பர் 02, 2001

Subramaniya Bharathi

நந்தலாலா

லாலாலஜபதிராய் துதி
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன் கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நின்னயவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்கனெலாம் மறக்கொனாதெம்
எண்ணகத்தே லாஜபதி, இடையின்றி
நீவளர்தற் கென் செய்வாரே (1)


ஒரு மனிதனி தனைப்பற்றி பலநாடு
கடத்தியவற்கு ஊறு செய்தல்
அருமையிலை. எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும், அந்த மேலோன்
பெருமையதன் கூறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெல்லாம்
ஓட்டியெவர் வாழ்வதிங்கே? (2)


பேரன்பு செய்தொழில் யாவரே
பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணண்பால் இரணியன்செய்
செய்தனனால் அவனுக்குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
டிற்பத்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ? (3)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X