பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 05, 2001
குருக்கள் துதி (குள்ளச்சாமி புகழ்)
நாடனைத்துந் தானாவா ன் நலிவி லாதான்
மோனகுரு திருவருளாய் பிறப்பு மாறி
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்:
சித்தினியாய் காட்டிமனத் தெளிவு தந்தான்
.வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி! (19)
எப்போதும் குருசரணம் நினைவாய், நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரத்தே சிகன்தாள் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெழியைக் கண்டான்,
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! (20)
(தொடரும்)












Click it and Unblock the Notifications