பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ராகம்- பூபாளம்
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார்மிசை யேதொருநூல் இதுபோலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே. (1)
மாரத வீரர் மலிந்ததன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலத்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன்னாடு
புத்தர் பிரனாருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே. (2)
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியுன் இன் பாலும்
கதலியும் செந்தேனும் நல்கும்எக் காலும்
(தொடரும்)












Click it and Unblock the Notifications