For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு:
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்,
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருத்துலகம் இங்குள்ள
யாவையும் செய்பவளே! (1)
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு:
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்,
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருத்துலகம் இங்குள்ள
யாவையும் செய்பவளே! (1)
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிரப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு;
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே. (2)
உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ - அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
வின்னற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே! (3)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]