பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
தான தனதந்தன தான தனந்தன
தானனந் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி
ஆரிய ராணியின் வில். (1)
இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்? - எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில். (2)
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே - மிக
நன்று பலிவேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை. (3)
சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஒங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல். (4)
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளையாடி - நன்று
உலகத்தோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை. (5)
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தோவியின் தோள். (6)
(தொடரும்)












Click it and Unblock the Notifications