பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 09, 2001
உபதேசம்
கருத்தையதில் காட்டுவேன்; வானைக் காட்டி
மையிலகு விழியாளிந்ன் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்.
அதற்கவன் காட்டிய குறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன் குள்ளச் சாமி யங்கே. (29)
கற்றவர்கள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறலே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும்கமல பாதக்
கருணை முனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்:
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்:
தம்பிரா னே: இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டை சுமந் திடுவதென்னே? மொழிவாய் என்றேன். (30)
(தொடரும்)












Click it and Unblock the Notifications